India
மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்றான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் முறைசாரா சந்திப்பு அக்.,11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ஜின்பிங்கும், மோடியும் மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று பகுதிகளுக்குச் சென்று அதனை பார்வையிட்டபடி இருநாட்டுத் தொடர்பு குறித்துப் பேசினர். இருநாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த இரு வெளியுறவுத் துறை அதிகாரிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
முதல் நாள் சந்திப்பின் போது மோடிக்கும், சீன அதிபருக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஐ.எஃப்.எஸ் அதிகாரியும், சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளருமான (அரசியல் பிரிவு) மது சூதன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
மற்றொருவர், இரண்டாம் நாள் சந்திப்பின் போது மோடி, ஜின்பிங்குடன் உடன் இருந்த இந்தியத் தூதரக அதிகாரி பிரியங்கா சோஹானி. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2012ம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
மராட்டி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராக உள்ள பிரியங்கா, 2016ம் ஆண்டு முதல் சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றி வருகிறார். வெறும் மூன்றே ஆண்டுகளில் சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரினை வெகு விரைவில் கற்று அதிலும் கைதேர்ந்தவராக வலம் வருகிறார்.
இவர்தான், மாமல்லபுரத்தில் மோடி ஜின்பிங்கின் இரண்டாம் நாள் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டுள்ளார். சீன அதிபர் ஜின் பிங் சென்னை வந்தது முதல் அவரை வரவேற்று அவரது இந்த பயணத்துக்கான பொறுப்பு அதிகாரியாகச் செயல்பட்டுள்ளார்.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளாராக அரசியல் பிரிவில் பணியாற்றும் பிரியங்கா சோஹானி வெளி விவகாரத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பிமல் சன்யால் விருது மற்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!