India
76000 கோடி ரூபாய் வாராக்கடனை தள்ளுபடி செய்தது SBI- 100 கோடிக்கு மேல் வாங்கிய 980 பேரின் கடன்கள் தள்ளுபடி!
எஸ்பிஐ வங்கியில் வசூலாகாமல் இருந்த வாராக்கடனான 76 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருப்பதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முக்கிய வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குப் பறக்கும் தொழிலதிபர்களைப் பற்றி நாம் அறிகிறோம். அதே நேரத்தில் முக்கிய வங்கிகள் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக அறிவித்து அதனை தள்ளுபடி செய்து வரும் புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தாண்டு மார்ச் 31 வரை அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கி வாராக்கடனாக ரூபாய் 76,000 கோடியை தள்ளுபடி செய்து இருப்பதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
980 பேர் 100 கோடிக்கு மேல் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றைக் கட்டத் தவறியதால், வாராக்கடனாக அறிவித்து வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி பட்டியலிட்டு இருக்கிறது.
980 கணக்குகளில் 220 வங்கி கணக்குகள் பாரத ஸ்டேட் வங்கிக் கணக்குகளாகும். 500 கோடிக்குமேல் கடன் பெற்ற 71 வங்கி கணக்குகளின் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
எஸ்பிஐ வங்கியில் 33 பேர் பெற்ற 500 கோடிக்கு அதிகமான வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, 100 கோடிக்கு மேல் பெற்ற 94 பேரின் கடன்களையும், 500 கோடிக்கு மேல் வாங்கிய 12 பேரின் வாராக்கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
இதேபோல ஐடிபிஐ வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் கோடிக் காணக்கில் வாராக்கடனை தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஜீவா பாரதி
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!