India
இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆங்கிலேயர்களும், முகலாயர்களுமே காரணம் - யோகி ஆதித்யநாத்
மும்பையில் நடைபெற்ற உலக இந்து பொருளாதார மாநாட்டில் உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "200 ஆண்டுகளுக்கு முன் உலகிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக திகழ்ந்தது இந்தியா. நம் பொருளாதார நிலை கண்டு உலகமே வியந்தது. முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்த நேரத்தில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா வைத்திருந்தது.
முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா, உலக பொருளாதாரத்தில் 36 சதவீதம் வகித்திருந்தது. இவர்கள் வெளியேறி, பிரிட்டிஷ் வந்தபோது, இந்தியாவின் பங்கு 20 சதவீதமாகக் குறைந்து விட்டது.
ஆங்கிலேயர்களின் 200 ஆண்டு கால ஆட்சியின் போது இந்திய பொருளாதாரம் பலவீனப்படுத்தப்பட்டது. இந்திய பொருளாதாரத்தை சுரண்டியதே ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் தான்" எனக் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினர் ஓவைசி, எந்த ஒரு விஷயம் குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்பதை யோகி ஆதித்யநாத் நிரூபித்துள்ளார் என கூறியுள்ளார். மேலும், அவர் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருப்பது அதிர்ஷ்டம் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!