India
இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி?
பசுமை பட்டாசுகள் தவிர வேறு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
2017ம் ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதனை நீக்கக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது.
இன்னும் இறுதித் தீர்ப்பு வராததால் கடந்த ஆண்டு உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் தொடரும் என்று டெல்லி போலிஸார் கூறியுள்ளனர். அதன்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முடியும் என்று அறிவித்துள்ளனர்.
சரவெடி போன்ற தொடர்ந்து வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்க முடியாது. 125 டெசிபலுக்கு குறைந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவேண்டும். மருத்துவமனை, வழிபாட்டு இடங்கள், கல்வி நிலையங்கள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பசுமை பட்டாசுகளைத் தவிர பேரியம், லித்தியம்,மெர்க்குரி உள்ளிட்ட வேதிப்பொருள் கலந்த பட்டாசுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!