India
இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி?
பசுமை பட்டாசுகள் தவிர வேறு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
2017ம் ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதனை நீக்கக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது.
இன்னும் இறுதித் தீர்ப்பு வராததால் கடந்த ஆண்டு உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் தொடரும் என்று டெல்லி போலிஸார் கூறியுள்ளனர். அதன்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முடியும் என்று அறிவித்துள்ளனர்.
சரவெடி போன்ற தொடர்ந்து வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்க முடியாது. 125 டெசிபலுக்கு குறைந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவேண்டும். மருத்துவமனை, வழிபாட்டு இடங்கள், கல்வி நிலையங்கள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பசுமை பட்டாசுகளைத் தவிர பேரியம், லித்தியம்,மெர்க்குரி உள்ளிட்ட வேதிப்பொருள் கலந்த பட்டாசுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!