India
புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு : திட்டமிட்டு கொலை செய்த பா.ஜ.க தலைவர் அதிரடியாக கைது!
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 23ம் தேதி தனது மனைவியுடன் சென்றபோது ரவுடி கும்பல் ஒன்று சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், கொடூரமாக வெட்டியும் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சுகன், ரங்கராஜ், அப்துல் நசீம் ஆகிய மூன்று பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து சுகன் மற்றும் அவனது கூட்டாளிகளை காலாப்பட்டு போலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சோழன் என்பவர் கொலை செய்யக் கூறியதாகவும் அதற்காக பணம் தருவதாகத் தெரிவித்தாகவும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சோழனை தனிப்படை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவனது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சோழன், புதுச்சேரி மாநில பா.ஜ.க வர்த்தக அணி தலைவர் ஆவார்.
மேலும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் சோழன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?