India
புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு : திட்டமிட்டு கொலை செய்த பா.ஜ.க தலைவர் அதிரடியாக கைது!
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 23ம் தேதி தனது மனைவியுடன் சென்றபோது ரவுடி கும்பல் ஒன்று சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், கொடூரமாக வெட்டியும் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சுகன், ரங்கராஜ், அப்துல் நசீம் ஆகிய மூன்று பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து சுகன் மற்றும் அவனது கூட்டாளிகளை காலாப்பட்டு போலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சோழன் என்பவர் கொலை செய்யக் கூறியதாகவும் அதற்காக பணம் தருவதாகத் தெரிவித்தாகவும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சோழனை தனிப்படை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவனது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சோழன், புதுச்சேரி மாநில பா.ஜ.க வர்த்தக அணி தலைவர் ஆவார்.
மேலும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் சோழன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!