India
புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு : திட்டமிட்டு கொலை செய்த பா.ஜ.க தலைவர் அதிரடியாக கைது!
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 23ம் தேதி தனது மனைவியுடன் சென்றபோது ரவுடி கும்பல் ஒன்று சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், கொடூரமாக வெட்டியும் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சுகன், ரங்கராஜ், அப்துல் நசீம் ஆகிய மூன்று பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து சுகன் மற்றும் அவனது கூட்டாளிகளை காலாப்பட்டு போலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சோழன் என்பவர் கொலை செய்யக் கூறியதாகவும் அதற்காக பணம் தருவதாகத் தெரிவித்தாகவும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சோழனை தனிப்படை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவனது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சோழன், புதுச்சேரி மாநில பா.ஜ.க வர்த்தக அணி தலைவர் ஆவார்.
மேலும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் சோழன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பின்வாங்கிய தவெக அரசு.. அரசுப்பணியில் ராதன் பண்டிட்.. சட்டமன்றம் வரை எதிரொலித்த கடும் எதிர்ப்பு!”
-
“இந்த Change-க்கு பின்னால் பெரிய Exchange இருக்கிறதோ?” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
“Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்த தவெகவின் Dirty Politics” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
”நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 சாபங்கள்.. பொருளாதார அவசர நிலையா?” - முரசொலி தலையங்கம் கேள்வி!
-
அதிகாலையில் நடந்த கொடூரம் : லாரி மீது கார் மோதி காவலர் உட்பட 6 பேர் பலி!