India
“கிரிமினல் வழக்கில் அசையா சொத்துகளை முடக்க, போலிஸாருக்கு அதிகாரமில்லை” - உச்சநீதிமன்றம் அதிரடி!
கிரிமினல் வழக்குகளில் காவல்துறையினர் எந்த அசையா சொத்துகளையும் முடக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 102ன் கீழ் எந்த அசையா சொத்தையும் காவல்துறையினர் கைப்பற்ற அதிகாரம் கிடையாது என ஏற்கெனவே மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிஆர்பிசி பிரிவு 102ன் கீழ் விசாரணையின் போது காவல்துறைக்கு குற்றவாளியின் அசையா சொத்துகளை முடக்குவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!