India
“தினமும் ஆஃபர் தரக்கூடாது” : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு உணவக ஆணையம் கடிதம்!
ஸொமேட்டோ, ஊபர் ஈட்ஸ், ஃபுட் பாண்டா, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடிகளை வழங்குவதால், தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக உணவகங்கள் புகார் தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து, அதிகப்படியான சலுகைகள் அளிக்கக்கூடாது என ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தேசிய உணவக ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், உணவகங்களிலிருந்து, ஆன்லைன் ஆர்டர் கமிஷன் பிரச்னை, அழுத்தம் உள்ளிட்ட பல புகார்கள் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தள்ளுபடிகளை எப்போதாவது அல்லது விழாக்காலங்களின் போது வழங்கினால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், வருடத்தின் எல்லா நாட்களிலும் 30 முதல் 70% வரைதள்ளுபடி வழங்கப்பட வேண்டும் எனக் கூறுவதில் நியாயமில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள தேசிய உணவு ஆணைய தலைவர் அனுராக் கட்ரியார், “நாங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் எதிராகச் செயல்படவில்லை. ஆனால், இதைப் பயன்படுத்தி தேவையற்ற மேலாதிக்கம் செலுத்தப்படுவதாலே நாங்கள் தலையிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்
-
“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!