India
இன்னும் 4 மாதங்களில் டெல்லியில் அனைவருக்கும் இலவச wifi : கெஜ்ரிவால் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
2015ம் ஆண்டு டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பரப்புரையின் போது டெல்லி மக்களுக்கு இலவச வைஃபை(wi-fi) வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் கெஜ்ரிவால்.
இதனையடுத்து பெரும்பான்மை தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்வரி மாதத்தோடு கெஜ்ரிவாலின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக டெல்லிக்கு இலவச வைஃபை இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லி முழுவதும் முதல் கட்டமாக 11 ஆயிரம் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள வைஃபை வசதியால் தலா 15 GB இண்டர்நெட் வசதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பணிபுரியும் பெண்களுக்காக இலவச மெட்ரோ சேவை வழங்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச வைஃபை வழங்கப்படும் என்றும் அண்மையில் கெஜ்ரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !