India
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - கடும் அமளிக்கு இடையே அமித்ஷா அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கும், கூச்சல் குழப்பத்திற்கும் மத்தியில் காஷ்மீருக்கான சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார் அமித்ஷா. மேலும், சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதன் மூலம் பிற மாநிலத்தவர்கள் அசையா சொத்துகளை வாங்க வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார். இதேபோல், 370 ஐ நீக்கியதை அடுத்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 35ஏ பிரிவும் ரத்தாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில் மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கும் அறிவிப்பின் மூலம் மேலும் பரபரப்பான சூழல் நிலவும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
Also Read
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!