India
நாய்களுக்கு பயந்து வீட்டுக்குள் புகுந்தவரை திருடன் என நினைத்து எரித்த மக்கள்!
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் 28 வயதான தலித் இளைஞர் குமார் வியாழக்கிழமை இரவு தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தெரு நாய்களால் துரத்தப்பட்ட அவர், தப்பிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்.வீட்டில் வசிப்பவர்கள் அவரை திருடன் என்று தவறாக நினைத்து அவரைத் தாக்கி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரிக்க முயன்றதாக போலீஸார் கூறினர். உயிருடன் ஒருவரை எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமார் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டு லக்னோவின் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!