India
நாய்களுக்கு பயந்து வீட்டுக்குள் புகுந்தவரை திருடன் என நினைத்து எரித்த மக்கள்!
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் 28 வயதான தலித் இளைஞர் குமார் வியாழக்கிழமை இரவு தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தெரு நாய்களால் துரத்தப்பட்ட அவர், தப்பிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்.வீட்டில் வசிப்பவர்கள் அவரை திருடன் என்று தவறாக நினைத்து அவரைத் தாக்கி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரிக்க முயன்றதாக போலீஸார் கூறினர். உயிருடன் ஒருவரை எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமார் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டு லக்னோவின் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!