India
நாய்களுக்கு பயந்து வீட்டுக்குள் புகுந்தவரை திருடன் என நினைத்து எரித்த மக்கள்!
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் 28 வயதான தலித் இளைஞர் குமார் வியாழக்கிழமை இரவு தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தெரு நாய்களால் துரத்தப்பட்ட அவர், தப்பிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்.வீட்டில் வசிப்பவர்கள் அவரை திருடன் என்று தவறாக நினைத்து அவரைத் தாக்கி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரிக்க முயன்றதாக போலீஸார் கூறினர். உயிருடன் ஒருவரை எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமார் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டு லக்னோவின் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!