India
சரியாக மாடு மேய்க்காத 8 அதிகாரிகள் சஸ்பெண்ட் - உத்தர பிரதேச முதல்வர் யோகி கொடுத்த ‘ஷாக்’... !
உத்தரப் பிரதேச மாநிலம் பிராயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு கோசாலைகளில் அண்மையில் நோய் தாக்குதலால் 35 பசுமாடுகள் உயிரிழந்தன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைவர்களுடன் காணொலியில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோசாலை பராமரிப்பில் அலட்சியம் காட்டிய 8 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
கால்நடைகள் மற்றும் தங்குமிடங்களை பராமரிப்பதில் திறமையின்மை இருப்பதாகக் கூறி மாவட்ட நீதிபதி உட்பட மூன்று அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். எதிர்காலத்தில் பசு பராமரிப்பில் அரசு ஊழியர்கள் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் ஆதித்யநாத் கூறியுள்ளார். மீறினால் கால்நடை பராமரிப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சரின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இது குறித்து பேசிய பா.ஜ.க.,வின் மனேஜ் மிஸ்ரா, “ பசுக்கள் பாதுகாப்புக்கு உ.பி அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; ஆதித்யநாத் ஆட்சியில் அவை ஆரோக்கியமாக இருப்பதுடன் நல்ல உணவும் கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!