India
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு
உத்தர பிரதேசத்தின் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டுள்ளது லக்னோ சிறப்பு நீதிமன்றம்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து பா.ஜ.க மூத்தத் தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, அத்வானி, உள்ளிட்ட 19 பேரை விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ மேல்முறையீடு செய்ததை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களின் விடுதலை குறித்து மறு ஆய்வு செய்து 2019 ஏப்ரல் 19ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என 2017 ஏப்.,19ல் உத்தரவிட்டது.
விசாரணைக்கான 2 ஆண்டுகாலம் முடிவடைந்ததை ஒட்டி, உச்ச நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் மேலும் 6 மாதம் அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தது சிறப்பு நீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் அமர்வு முன் வந்த போது, சிறப்பு நீதிமன்றத்துக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து ஜூலை 19ம் தேதிக்குள் உத்தர பிரதேச அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
Also Read
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!