India
விண்ணில் செல்ல தயார் நிலையில் சந்திராயன் 2: 20 மணிநேர கவுண்ட் டவுன் தொடங்கியது!
நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் விண்ணில் செல்வதற்கு தயாராகிவிட்டது சந்திராயன் 2.
சுமார் 603 கோடி ரூபாய் செலவில், 2370 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 விண்கலம், நாளை அதிகாலை (ஜூலை 15) 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 20 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 6.51க்கு தொடங்கியது.
வெப்பநிலையை ஆய்வு செய்யக்கூடிய கருவிகள், அதிநவீன கேமிராக்கள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடிய கருவிகள் என சந்திராயன் 2 விண்கலத்தில் 13 வகையான நவீன கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.
மேலும், நாசாவின் Retro Reflector என்ற கருவியும் சந்திராயனுடன் நிலவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திராயன் 2 விண்கலம் செப்டம்பர் மாதம், 6ம் தேதி நிலவை சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Also Read
-
களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! : வடகிழக்கு பருவமழை குறித்து நேரில் ஆய்வு!
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!