India
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க பச்சைக் கொடி காட்டினார் குமாரசாமி!
டெல்லியில் கடந்த மாதம் 25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையிலான 4வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அனைத்து மாநில பிரதிநிதிகளின் வாதங்களையும் கேட்டறிந்த காவிரி மேலாண்மை ஆணையம், "காவிரியில் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் எனவும், நீர்வரத்து மற்றும் மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்" என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி. இது குறித்து அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பலன்பெறும் வகையில் காவிரியில் இருந்து நீரை திறந்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!