India
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க பச்சைக் கொடி காட்டினார் குமாரசாமி!
டெல்லியில் கடந்த மாதம் 25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையிலான 4வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அனைத்து மாநில பிரதிநிதிகளின் வாதங்களையும் கேட்டறிந்த காவிரி மேலாண்மை ஆணையம், "காவிரியில் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் எனவும், நீர்வரத்து மற்றும் மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்" என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி. இது குறித்து அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பலன்பெறும் வகையில் காவிரியில் இருந்து நீரை திறந்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!