India
வங்கி, ரயில்வே துறைத் தேர்வுகளை தமிழ் மொழியிலும் இனி எழுதலாம் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ரயில்வே மற்றும் வங்கித்துறைத் தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் அறிவித்தார்.
ரயில்வே மற்றும் வங்கித்துறையில் பணியாற்றுவதற்கான தேர்வுகளில் இதுகாறும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டு வந்தன.
இந்நிலையில், நாளை (ஜூலை 5) 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இது அவரது முதல் பட்ஜெட்.
அதற்கு முன்னதாக, இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அப்போது பேசிய அவர், இனி வங்கி மற்றும் ரயில்வேத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்தார்.
இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறமுடியும்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!