India
நாளை தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் : தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?
17வது மக்களவையின் முதல் பட்ஜெட்டை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.
2019-20ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம், அப்போதைய நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், 4 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் கேட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.க. அரசு 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண்ணாக நிதியமைச்சர் பொறுப்பு வகித்திருக்கும் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதிய பட்ஜெட் மூலம் தனிநபர் வருமான வரி உச்சவரம்பை 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே அது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதேபோல், நாடு முழுவதும் வறட்சி நிலவும் நிலையில், விவசாயிகளுக்கு சலுகைகள், புதிய ரயில் தடங்கள் உள்ளிட்ட புதிய திட்டங்கள் இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!