India
நிதி அமைச்சரை சந்தித்து தாழ்த்தப்பட்டோருக்கான திட்டங்களை வலியுறுத்திய வி.சி.க எம்.பி.,கள்!
தொல்.திருமாவளவன், ரவிக்குமார் ஆகிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ட்விட்டரில் பதிவு செய்துள்ள ரவிக்குமார் எம்.பி, தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எஸ்.சி / எஸ்.டி மக்களுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விழுப்புரத்தில் நகைத் தொழிலாளர்களுக்கான பூங்கா அமைத்தல், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் துவக்குதல், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட விழுப்புரம் தொகுதி தொடர்பாக விரிவாக எடுத்துரைத்ததாகவும், நிச்சயம் உதவுவதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாகவும் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!