India
நிதி அமைச்சரை சந்தித்து தாழ்த்தப்பட்டோருக்கான திட்டங்களை வலியுறுத்திய வி.சி.க எம்.பி.,கள்!
தொல்.திருமாவளவன், ரவிக்குமார் ஆகிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ட்விட்டரில் பதிவு செய்துள்ள ரவிக்குமார் எம்.பி, தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எஸ்.சி / எஸ்.டி மக்களுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விழுப்புரத்தில் நகைத் தொழிலாளர்களுக்கான பூங்கா அமைத்தல், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் துவக்குதல், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட விழுப்புரம் தொகுதி தொடர்பாக விரிவாக எடுத்துரைத்ததாகவும், நிச்சயம் உதவுவதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாகவும் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!