India
நிதி அமைச்சரை சந்தித்து தாழ்த்தப்பட்டோருக்கான திட்டங்களை வலியுறுத்திய வி.சி.க எம்.பி.,கள்!
தொல்.திருமாவளவன், ரவிக்குமார் ஆகிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ட்விட்டரில் பதிவு செய்துள்ள ரவிக்குமார் எம்.பி, தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எஸ்.சி / எஸ்.டி மக்களுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விழுப்புரத்தில் நகைத் தொழிலாளர்களுக்கான பூங்கா அமைத்தல், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் துவக்குதல், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட விழுப்புரம் தொகுதி தொடர்பாக விரிவாக எடுத்துரைத்ததாகவும், நிச்சயம் உதவுவதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாகவும் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!