India
நிதி அமைச்சரை சந்தித்து தாழ்த்தப்பட்டோருக்கான திட்டங்களை வலியுறுத்திய வி.சி.க எம்.பி.,கள்!
தொல்.திருமாவளவன், ரவிக்குமார் ஆகிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ட்விட்டரில் பதிவு செய்துள்ள ரவிக்குமார் எம்.பி, தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எஸ்.சி / எஸ்.டி மக்களுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விழுப்புரத்தில் நகைத் தொழிலாளர்களுக்கான பூங்கா அமைத்தல், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் துவக்குதல், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட விழுப்புரம் தொகுதி தொடர்பாக விரிவாக எடுத்துரைத்ததாகவும், நிச்சயம் உதவுவதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாகவும் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!