India
பொய்ச் செய்திகளை கட்டுப்படுத்த தனிச் சட்டம் தேவை : மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்!
சமூக ஊடகங்களில் பரவும் பொய்ச் செய்திகள், வதந்திகள் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்றவேண்டும் என மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளும், தவறான தகவல்களும் அதிகமாகப் பரப்பப்படுகின்றன. வாட்ஸ்-அப் வதந்திகளை நம்பி பலர் கொல்லப்படும் சூழலையும் நாம் கண்டிருக்கிறோம். இந்நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகள் அதிகமாக எழத் துவங்கியுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசினார். அப்போது, “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் சமூகத்தில் வகுப்புவாதத்தையும், மக்களிடையே பிரிவினையையும் ஏற்படுத்துகின்றன.
வதந்திகள் தீவிரவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானவை என்பது உண்மையாகி இருக்கிறது. போலியான செய்திகள் கலவரம், சட்டம்-ஒழுங்கு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. பிரபலமானவர்களும் போலிச் செய்திகளை நம்பி பகிர்கின்றனர். போலிச் செய்திகளைத் தடுக்கம் முழுமையான சட்டம் கொண்டுவருவது அவசியம்” என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மாநிலங்களவை சபாநாயகர் வெங்கய்ய நாயுடு, “பொய்ச் செய்தி குறித்த இந்த விஷயம் முக்கியமானது. கருத்துச் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் கருத்தொற்றுமை அடிப்படையில் இந்தப் பிரச்னைகக்குத் தீர்வுகாண வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!