India
ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டம் : பா.ஜ.க அரசு முயற்சி!
நாடு முழுவதும் ஒரே நாடு -ஒரே குடும்ப அட்டை என்னும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற மாநில உணவுத்துறை செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,இந்த திட்டத்தின் மூலம் நுகர்வோர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்றார்.
ஸ்மார்ட் கார்டு மூலம் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நுகர்வோர் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இந்த திட்டம் கொண்டுவரப்பட இருப்பதாக கூட்டத்தில் பேசிய ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக அடுத்த ஆறு மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள உணவு தானிய கிடங்குகளை முதலில் இணையதளம் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்த போவதாக ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பெற்றுக் கொள்ளலாம் என்கிற நடைமுறை இருக்கிறது. இதைப் போன்று நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்படும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருக்கிறார்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!