India
பசு காவல் குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை : மத்திய பிரதேச அரசு அதிரடி!
நாடெங்கும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்வா சித்தாந்தங்களை மக்கள் மீது திணிப்பதற்காக மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ அவர்களை வன்முறைக்கு ஆளாக்குவதும், சிறுபான்மையினர், தலித்துகளை கொலை செய்வதையுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது மதவாதக்கும்பல்.
இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களை ஒடுக்கும் விதமாக மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு புதிய சட்டத்தை இயற்றத் திட்டமிட்டிருக்கிறது.
அதாவது, பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில், மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களையும், மாட்டிறைச்சி உண்பவர்களையும் வன்முறைக்கு ஆளாக்கும் / கொலைவெறித் தாக்குதலில் செயல்களில் ஈடுபடும் குண்டர்களை கைது செய்து 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இயற்றவுள்ளது.
இந்தியாவிலேயே பசு குண்டர்களுக்கு எதிராக முதன்முறையாக சட்டம் இயற்றி தண்டனை கொடுக்கும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
முன்னதாக, உத்தர பிரதேசத்தில் உள்ள முதியவர் ஒருவரை மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்துக் கொன்றதை அடுத்து பசு குண்டர்களை உச்சநீதிமன்றமே கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin