India
பசு காவல் குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை : மத்திய பிரதேச அரசு அதிரடி!
நாடெங்கும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்வா சித்தாந்தங்களை மக்கள் மீது திணிப்பதற்காக மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ அவர்களை வன்முறைக்கு ஆளாக்குவதும், சிறுபான்மையினர், தலித்துகளை கொலை செய்வதையுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது மதவாதக்கும்பல்.
இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களை ஒடுக்கும் விதமாக மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு புதிய சட்டத்தை இயற்றத் திட்டமிட்டிருக்கிறது.
அதாவது, பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில், மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களையும், மாட்டிறைச்சி உண்பவர்களையும் வன்முறைக்கு ஆளாக்கும் / கொலைவெறித் தாக்குதலில் செயல்களில் ஈடுபடும் குண்டர்களை கைது செய்து 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இயற்றவுள்ளது.
இந்தியாவிலேயே பசு குண்டர்களுக்கு எதிராக முதன்முறையாக சட்டம் இயற்றி தண்டனை கொடுக்கும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
முன்னதாக, உத்தர பிரதேசத்தில் உள்ள முதியவர் ஒருவரை மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்துக் கொன்றதை அடுத்து பசு குண்டர்களை உச்சநீதிமன்றமே கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!