India
நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இருந்த நகராட்சி அதிகாரியை பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா பலர் முன்னிலையில் கடுமையாகத் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் இந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்தபோது தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆகாஷ், கிரிக்கெட் மட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. செய்தியாளர்கள் வாக்குவாதத்தைப் படம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ கிரிக்கெட் மட்டையால் தாக்கிய காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்தூர்-3 தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான ஆகாஷ் விஜய்வர்கியா, பா.ஜ.க மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆவார். அரசு அதிகாரியைத் தாக்கியதற்காக பா.ஜ.க எம்.எல்.ஏ உட்பட 11 பேர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்