India
நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இருந்த நகராட்சி அதிகாரியை பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா பலர் முன்னிலையில் கடுமையாகத் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் இந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்தபோது தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆகாஷ், கிரிக்கெட் மட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. செய்தியாளர்கள் வாக்குவாதத்தைப் படம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ கிரிக்கெட் மட்டையால் தாக்கிய காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்தூர்-3 தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான ஆகாஷ் விஜய்வர்கியா, பா.ஜ.க மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆவார். அரசு அதிகாரியைத் தாக்கியதற்காக பா.ஜ.க எம்.எல்.ஏ உட்பட 11 பேர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!