India
பீகார் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர்களிடம் விசாரிக்க உத்தரவு!
பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான விவகாரத்தில் மத்திய, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் மூளைக்காய்ச்சல் நோயால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். உயிரிழப்பு அதிகரித்ததற்கு மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறி, தமண்ணா ஹாஷ்மி என்பவர் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் தங்கள் பணிகளை சரிவர செய்யாததே உயிரிழப்பு அதிகரித்ததற்குக் காரணம் என மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், ஹர்ஷ்வர்தன், மங்கள் பாண்டே ஆகியோர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது. முன்னதாக, குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எடப்பாடி TO சென்னை TO டெல்லி... இதுதான் பழனிசாமியின் கடந்த 5 ஆண்டு பணியாக இருந்தது..” - கனிமொழி எம்.பி!
-
“திராவிட மாடல் அரசின் சாதனைகளை விட நீளமானது பழனிசாமியின் துரோகப் பட்டியல்”: முதலமைச்சர் கடும் விமர்சனம்!