India
பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது!
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மற்றும் கயா ஆகிய பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மற்றும் ஜப்பான் என்சபிலிட்டிஸ் என்ற இரு வகையான மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த மூளைக்காய்ச்சலால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த மூளைக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பீகாரில் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும், சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு குழந்தைகளின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், முசாபர்பூரில் மட்டும் அரசு மருத்துவமனையில் 109 பேரும் கெஜ்ரிவால் அரசு மருத்துவமனையில் 20 பேரும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!