India
பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது!
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மற்றும் கயா ஆகிய பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மற்றும் ஜப்பான் என்சபிலிட்டிஸ் என்ற இரு வகையான மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த மூளைக்காய்ச்சலால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த மூளைக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பீகாரில் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும், சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு குழந்தைகளின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், முசாபர்பூரில் மட்டும் அரசு மருத்துவமனையில் 109 பேரும் கெஜ்ரிவால் அரசு மருத்துவமனையில் 20 பேரும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!