India
பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது!
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மற்றும் கயா ஆகிய பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மற்றும் ஜப்பான் என்சபிலிட்டிஸ் என்ற இரு வகையான மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த மூளைக்காய்ச்சலால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த மூளைக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பீகாரில் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும், சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு குழந்தைகளின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், முசாபர்பூரில் மட்டும் அரசு மருத்துவமனையில் 109 பேரும் கெஜ்ரிவால் அரசு மருத்துவமனையில் 20 பேரும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!