India
17-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு!
542 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.,11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். பின்னர், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.
இதனையடுத்து, 17-வது மக்களவையின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 நாட்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.பி-களாக பதவியேற்றனர். இவர்களுக்கு தற்கால சபாநாயகராக இருந்த வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று மக்களவையின் அவைத் தலைவராக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்.பியாக உள்ள ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து மக்களவையில் புகழாரம் சூட்டினார்.
Also Read
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!