India
17-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு!
542 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.,11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். பின்னர், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.
இதனையடுத்து, 17-வது மக்களவையின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 நாட்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.பி-களாக பதவியேற்றனர். இவர்களுக்கு தற்கால சபாநாயகராக இருந்த வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று மக்களவையின் அவைத் தலைவராக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்.பியாக உள்ள ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து மக்களவையில் புகழாரம் சூட்டினார்.
Also Read
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!