India
17-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு!
542 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.,11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். பின்னர், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.
இதனையடுத்து, 17-வது மக்களவையின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 நாட்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.பி-களாக பதவியேற்றனர். இவர்களுக்கு தற்கால சபாநாயகராக இருந்த வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று மக்களவையின் அவைத் தலைவராக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்.பியாக உள்ள ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து மக்களவையில் புகழாரம் சூட்டினார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!