India
17-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு!
542 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.,11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். பின்னர், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.
இதனையடுத்து, 17-வது மக்களவையின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 நாட்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.பி-களாக பதவியேற்றனர். இவர்களுக்கு தற்கால சபாநாயகராக இருந்த வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று மக்களவையின் அவைத் தலைவராக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்.பியாக உள்ள ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து மக்களவையில் புகழாரம் சூட்டினார்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!