India
மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் மு.க.ஸ்டாலின், மம்தா!
பிரதமர் மோடி தலைமையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5-வது பொதுக்கூட்டம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நடைபெற்ற இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. மேலும், மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் தராததால், கூட்டத்தை புறக்கணிப்பதாகத் தெரிவித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையைக் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, இன்று பிற்பகலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறையை தொடக்கத்திலிருந்து எதிர்த்து வரும் தி.மு.க இக்கூட்டத்தைப் புறக்கணிக்கும் எனத் தெரிகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இக்கூட்டத்தைப் புறக்கணிக்கிறார். தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய வாத காங்கிர தலைவர் சரத் பவார் ஆகியோரும் இக்கூட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள்.
Also Read
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!