India
சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவது எப்போது? - இஸ்ரோ அறிவிப்பு!
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். சந்திராயன் 2 விண்கலத்தை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வரும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலம் சந்திராயன் 2 செயற்கைகோள் வருகிற ஜூலை மாதம் 15ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ சிவன், “3.8 டன் எடைக்கொண்ட சந்திராயன் 2 விண்கலம், நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளுடன் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இதில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ரோவர் கருவி நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யவுள்ளது என்றும், உலக அளவில் எந்த நாடும் செய்திராத முயற்சியை இஸ்ரோ மேற்கொள்ளவுள்ளது என்றும்” அதன் சிவன் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!