India
சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவது எப்போது? - இஸ்ரோ அறிவிப்பு!
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். சந்திராயன் 2 விண்கலத்தை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வரும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலம் சந்திராயன் 2 செயற்கைகோள் வருகிற ஜூலை மாதம் 15ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ சிவன், “3.8 டன் எடைக்கொண்ட சந்திராயன் 2 விண்கலம், நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளுடன் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இதில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ரோவர் கருவி நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யவுள்ளது என்றும், உலக அளவில் எந்த நாடும் செய்திராத முயற்சியை இஸ்ரோ மேற்கொள்ளவுள்ளது என்றும்” அதன் சிவன் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!