India
சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவது எப்போது? - இஸ்ரோ அறிவிப்பு!
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். சந்திராயன் 2 விண்கலத்தை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வரும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலம் சந்திராயன் 2 செயற்கைகோள் வருகிற ஜூலை மாதம் 15ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ சிவன், “3.8 டன் எடைக்கொண்ட சந்திராயன் 2 விண்கலம், நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளுடன் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இதில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ரோவர் கருவி நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யவுள்ளது என்றும், உலக அளவில் எந்த நாடும் செய்திராத முயற்சியை இஸ்ரோ மேற்கொள்ளவுள்ளது என்றும்” அதன் சிவன் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!