India
டெல்லியை பாதுகாக்க 5 அடுக்கு கவச பாதுகாப்பு!
இந்தியாவின் தலைநகராக விளங்கும் டெல்லி, இந்திய எல்லைக்கு அருகே உள்ளதால், எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் டெல்லி மக்களின் பாதுகாப்பையும், முக்கிய சின்னங்களையும் பாதுகாக்க, ஏவுகணை தடுப்பு கவசம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியின் பாதுகாப்புக்காக ஏவுகணை தடுப்புக் கவசம் அமைப்பதற்காக அமெரிக்காவிடமிருந்து ரூ.6 ஆயிரம் கோடி செலவில் ஏவுகணை எதிர்ப்பு தடவாளங்கள் வாங்கப்பட உள்ளன.
ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு கவசம் 5 அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். முதல் அடுக்கு டெல்லியின் புறநகர் பகுதியில் அமையும். இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை முறியடிக்கும் அமைப்பு இருக்கும்.
இரண்டாம் அடுக்கு டெல்லியை சுற்றியிருக்கும். மூன்றாம் அடுக்கில் பாரக் ரக ஏவுகணைகள் இருக்கும். பாரக் ஏவுகணைகள் விமானங்கள், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை கொண்டவை. டெல்லியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நான்காவது வளையத்தில் ஆகாஷ் ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும்.
நான்கு அடுக்குகளையும் காக்கும் ஐந்தாம் அடுக்கில் நாசாம்ஸ் ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த 5 பாதுகாப்பு வளையங்களின் மூலம் டெல்லியை முழுமையாக காப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Also Read
-
திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
“பாஜக ஒரு பாறாங்கள்.. அதை கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்தால்...” - நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கு!
-
“டில்லி சரணம் பாடி பழனிசாமி.. அதிகார பங்கிற்கு ஒரு கட்சியும் ஏறிட்டு பார்க்கவில்லை..” - கி.வீரமணி தாக்கு!
-
சென்னையில் புதிதாக 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்! : மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தகவல்!
-
“NDA கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?” : அமைச்சர் சேகர்பாபு கேள்வி!