India
ரமலான் பண்டிகை: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்!
இஸ்லாமியர்களில் 5 முக்கிய கடமைகளின் ஒன்றான ரமலான் நோன்பு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது.
வானில் பிறை தென்பட்டதால் மத்திய கிழக்கு நாடுகளாக சவுதி, கத்தார் போன்ற அரபு நாடுகளில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலை தமிழகத்தின் பிறை தெரிந்ததால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் ஈகை பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி, காலை முதலே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணியில் இன்று காலை நடந்த சிறப்பு தொழுகையில் வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.
இதேப்போல், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
Also Read
-
‘மேகதாது அணை விவகாரம்.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு.. நாடாளுமன்றத்தில் திமுக அவை ஒத்திவைப்பு நோட்டீஸ்!’
-
“தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார்.. வாழ்க மறைமலையடிகள் புகழ்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
பள்ளிகளில் தொடரும் தவெக ரீல்ஸ்.. மாணவர்களின் நிலை என்ன ஆகும்.. அமைச்சரின் உத்தரவுக்கு மதிப்பில்லையா?
-
இவையெல்லாம் மறைக்கவே போலீஸ் பாணி... தவெக அரசின் அராஜகத்தை புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
தவெக ஆட்சியின் 60 நாட்களில் பதிவான 6 காவல்துறை தொடர்பான உயிரிழப்புகள்! : பட்டியலிட்ட திமுக!