India
“நேருவின் 55வது நினைவு தினம் இன்று” - டெல்லியில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் மரியாதை!
இந்தியாவின் முதல் பிரதமாரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெல்லி சாந்திவனில் உள்ள நேருவின் நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அவர்களை அடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியும், காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா ஆகியோரும் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் வலிமையான, சுதந்திரமான, நவீன நிறுவனங்களை உருவாக்குவதில் நேருவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது நினைவுக்கூரத்தக்கது. மேலும், அவரின் பங்களிப்பு 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகத்தை தக்க வைத்துக்கொள்ள உதவியிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!