India
“நேருவின் 55வது நினைவு தினம் இன்று” - டெல்லியில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் மரியாதை!
இந்தியாவின் முதல் பிரதமாரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெல்லி சாந்திவனில் உள்ள நேருவின் நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அவர்களை அடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியும், காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா ஆகியோரும் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் வலிமையான, சுதந்திரமான, நவீன நிறுவனங்களை உருவாக்குவதில் நேருவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது நினைவுக்கூரத்தக்கது. மேலும், அவரின் பங்களிப்பு 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகத்தை தக்க வைத்துக்கொள்ள உதவியிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!