பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
India

நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி!

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களை பெற்று வெற்றி பெற்றதையடுத்து மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சர்களும் நாளை (மே 30) மாலை 7 மணிக்கு பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவிற்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைக்கிறார்.