India
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமிய இளைஞர்கள் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல்!
பா.ஜ.க ஆட்சியில் உணவுக்காக மாட்டை வெட்ட தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்துத்வா கும்பல் மாட்டுக்கறி உண்பவர்களைத் தாக்கி வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி நகரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இந்துத்வா கும்பல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஆட்டோவில் சென்ற இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் ஒரு பெண்ணை வழிமறித்து மாட்டிறைச்சியைப் பதுக்கியதாக சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கோரி மூன்று பேரையும் ‘பசுக்காவல் குண்டர்கள்’ கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்லாமிய இளைஞர்களைத் தாக்கியதற்கு பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து, கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட ராம் சேனாவின் சுபம் பாகேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!