India
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமிய இளைஞர்கள் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல்!
பா.ஜ.க ஆட்சியில் உணவுக்காக மாட்டை வெட்ட தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்துத்வா கும்பல் மாட்டுக்கறி உண்பவர்களைத் தாக்கி வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி நகரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இந்துத்வா கும்பல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஆட்டோவில் சென்ற இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் ஒரு பெண்ணை வழிமறித்து மாட்டிறைச்சியைப் பதுக்கியதாக சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கோரி மூன்று பேரையும் ‘பசுக்காவல் குண்டர்கள்’ கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்லாமிய இளைஞர்களைத் தாக்கியதற்கு பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து, கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட ராம் சேனாவின் சுபம் பாகேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.
Also Read
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!