India
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது!
மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளிவந்ததில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியே மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது.
இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணிசமான வாக்குகளே பெற்றிருந்தாலும், தமிழகத்தில் திமுக உடனான கூட்டணியில் தங்களது வெற்றியை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்குட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்தத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மற்றும் மூத்தத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது பாட்டீல் பங்கேற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் முதலமைச்சர்களான நாராயணசாமி, கேப்டன் அம்ரீந்தர் சிங், அசோக் கெலோட் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தேசிய செயலாளர்கள், காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!