India
மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு நாளை மறு வாக்குப்பதிவு !
நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த மே 19ம் தேதி நடந்து முடிவடைந்தது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள உத்தர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடிக்கு மட்டும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்காக வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 123வது வாக்குச்சாவடிக்கும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Also Read
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?
-
ரூ.62.5 கோடியில் UPSC தேர்வுப் பயிற்சி மையக் கட்டடம், செயலி... அறிமுகப்படுத்துகிறார் முதலமைச்சர்!