India
மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு நாளை மறு வாக்குப்பதிவு !
நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த மே 19ம் தேதி நடந்து முடிவடைந்தது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள உத்தர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடிக்கு மட்டும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்காக வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 123வது வாக்குச்சாவடிக்கும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!