India
மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு நாளை மறு வாக்குப்பதிவு !
நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த மே 19ம் தேதி நடந்து முடிவடைந்தது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள உத்தர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடிக்கு மட்டும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்காக வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 123வது வாக்குச்சாவடிக்கும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!