India
என்ன தியானம் செய்தாலும் மோடியை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது - திரிணாமுல் வேட்பாளர்
கடவுள் நினைத்தால் கூட மோடி தோற்பதை மாற்ற முடியாது என மேற்கு வங்க மாநிலத்தின் டைமண்ட் துறைமுகத் தொகுதி வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இனவாத கட்சியாக உள்ள பா.ஜ.கவை வெளியேற்ற வேண்டும் என்று மக்களே முடிவெடுத்துள்ளனர் என அபிஷேக் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தலில் கடவுளே நினைத்தால் கூட மோடியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியாது. எனவே அவர் தியானம் செய்துவிட்டு போகட்டும் என கிண்டல் செய்துள்ளார் அபிஷேக்.
கடந்த மே 15ம் தேதி அன்று, டைமண்ட் துறைமுகத்தில் நடந்த பிரசாரத்தின் போது, தன்னை பற்றி அவதூறாக பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
உரிய ஆதாரமில்லாமல் என்மீது மோடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இது குறித்து 36 மணிநேரத்திற்குள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், மோடி மீது அவதூறு வழக்கு தொடர்வேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !