India
என்ன தியானம் செய்தாலும் மோடியை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது - திரிணாமுல் வேட்பாளர்
கடவுள் நினைத்தால் கூட மோடி தோற்பதை மாற்ற முடியாது என மேற்கு வங்க மாநிலத்தின் டைமண்ட் துறைமுகத் தொகுதி வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இனவாத கட்சியாக உள்ள பா.ஜ.கவை வெளியேற்ற வேண்டும் என்று மக்களே முடிவெடுத்துள்ளனர் என அபிஷேக் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தலில் கடவுளே நினைத்தால் கூட மோடியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியாது. எனவே அவர் தியானம் செய்துவிட்டு போகட்டும் என கிண்டல் செய்துள்ளார் அபிஷேக்.
கடந்த மே 15ம் தேதி அன்று, டைமண்ட் துறைமுகத்தில் நடந்த பிரசாரத்தின் போது, தன்னை பற்றி அவதூறாக பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
உரிய ஆதாரமில்லாமல் என்மீது மோடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இது குறித்து 36 மணிநேரத்திற்குள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், மோடி மீது அவதூறு வழக்கு தொடர்வேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!