India

மோடியின் கேதார்நாத் பயணம்: தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார்!

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில் பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடி யாத்திரை சென்றிருப்பது விதிமீறல் என்று குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் அனுப்பியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸும் மோடியின் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்தில் விதிமீறல் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.