India
புத்த பூர்ணிமாவை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்? - உளவுத்துறை எச்சரிக்கை
புத்த மதத்தை தோற்றுவித்த கெளதம புத்தரின் பிறந்தநாளை புத்த பூர்ணிமா என்ற பெயரில் பெளத்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில், இந்த மாதம் நடைபெற இருக்கும் புத்த பூர்ணிமா அன்று ஐ.எஸ் அல்லது ஜமாத்உல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்த பூர்ணிமா விழா வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் என்பதால் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், எச்சரிக்கையை அடுத்து, இந்து மற்றும் புத்த வழிபாடு தலங்களிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேப்போன்ற தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்த உள்ளதாக இலங்கைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அதனை அலட்சியப்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Also Read
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!
-
33.43 ஏக்கர் பரப்பளவில்.. ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட நாவலூர் ஏரி... இப்போ எப்படி இருக்கு தெரியுமா?