India
“கிராம ஊராட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பா.ஜ.க” - பிரியங்கா காந்தி சாடல்!
உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் மோடியின் பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அமேதி தொகுதியில் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக பா.ஜ.க வழங்கி வருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. அவரை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பா.ஜ.க-வின் தேர்தல் விதிமீறல்களைப் பட்டியலிட்டார்.
அப்போது பேசிய அவர், “அமேதி தொகுதிகுட்பட்ட மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீஸாக கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால் பா.ஜ.க, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்து வருகிறது.
ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க-வின் ஸ்மிருதி இராணி தேர்தலுக்காகத்தான் இத்தொகுதிக்கு வந்து போகிறார். அவர் நாடகமாடுகிறார். அதை நம்பி மக்கள் ஏமாறவேண்டாம். ராகுல் அப்படியல்ல; இங்கிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார் அவர்.” எனப் பேசினார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!