India
கடும் வறட்சியால் விவசாயம் பாதிப்பு - கூலி வேலைகளுக்குச் செல்லும் கல்லூரி மாணவர்கள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த ஓராண்டாக விவசாயம் நடைபெறாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
புனே பகுதி விவசாயிகள் சிலர் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்பது இன்றியமையாத தேவை. ஆனால், கடும் வறட்சியால் பலர் படிப்பை விட்டுவிட்டு குடும்பத்திற்காக கூலி வேலைகளுக்குச் சென்று வருகின்றனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் பலரும், கடைகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். படிப்புச் செலவுக்காகவும், குடும்பத்திற்கு உதவியாக இருக்கும்பொருட்டும் கடைகளில் கூலி வேலை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வறுமையால் கோடை விடுமுறையில் கூலி வேலை செய்துவரும் மாணவர்களுக்கு, புனேவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறது. மஹாராஷ்டிரா அரசு 151 தாலுகாக்களை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!
-
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டி கொலை : கம்மல் கொள்ளை - நாகர்கோவில் அருகே கொடூரம்!
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!