India
நான்காம் கட்ட வாக்குப்பதிவு - இன்று மாலை ஓய்கிறது பிரசாரம்!
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, மே 6-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக, மொத்தம் 303 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், நான்காம் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
71 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 945 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர்.
வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !