India
புதுவடிவம் பெறுகிறது ரூபாய் நோட்டுகள்... ஆர்.பி.ஐ. அதிர்ச்சி தகவல்...
2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு அதற்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ததால் சில்லறை தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் சரிவு ஏற்பட்டது.
பின்னர் 500,200,100,50,10 என வரிசையாக பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸின் கையெழுத்து புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இல்லாததால் அவரது கையெழுத்துடன் கூடிய புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என ஆர்.பி.ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.ஐ. ஆளுநரின் கையெழுத்து இடம்பெற்றுள்ள ரூ.200,500 நோட்டுகளின் வடிவத்திலும் மாற்றம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுவரை 20 ரூபாய் நோட்டு மட்டும் புது வடிவம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!