India
புதுவடிவம் பெறுகிறது ரூபாய் நோட்டுகள்... ஆர்.பி.ஐ. அதிர்ச்சி தகவல்...
2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு அதற்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ததால் சில்லறை தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் சரிவு ஏற்பட்டது.
பின்னர் 500,200,100,50,10 என வரிசையாக பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸின் கையெழுத்து புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இல்லாததால் அவரது கையெழுத்துடன் கூடிய புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என ஆர்.பி.ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.ஐ. ஆளுநரின் கையெழுத்து இடம்பெற்றுள்ள ரூ.200,500 நோட்டுகளின் வடிவத்திலும் மாற்றம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுவரை 20 ரூபாய் நோட்டு மட்டும் புது வடிவம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”