India
புதுவடிவம் பெறுகிறது ரூபாய் நோட்டுகள்... ஆர்.பி.ஐ. அதிர்ச்சி தகவல்...
2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு அதற்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ததால் சில்லறை தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் சரிவு ஏற்பட்டது.
பின்னர் 500,200,100,50,10 என வரிசையாக பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸின் கையெழுத்து புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இல்லாததால் அவரது கையெழுத்துடன் கூடிய புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என ஆர்.பி.ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.ஐ. ஆளுநரின் கையெழுத்து இடம்பெற்றுள்ள ரூ.200,500 நோட்டுகளின் வடிவத்திலும் மாற்றம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுவரை 20 ரூபாய் நோட்டு மட்டும் புது வடிவம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!