India
சொகுசு ஹோட்டலில் செயல்படும் ‘லோக்பால்’ அமைப்பு!
லோக்பால் அமைப்பிற்கான தற்காலிக அலுவலகம் டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ‘லோக்பால்’ அமைப்பின் முதல் தலைவராக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் பரிந்துரையின்படி, பினாகி சந்திர கோஷ் தலைமையில் எட்டு உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்த நிலையில், அவர்கள் அனைவரும் கடந்த மார்ச் 27-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
லோக்பால் அமைப்புக்கென தனியாக அலுவலகம் இல்லாமல் இருந்தநிலையில், டெல்லி சாணக்யாபுரி பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலில் தற்காலிகமாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் லோக்பால் அமைப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களுக்கும் போதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !
-
தென்காசியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் என்னென்ன?
-
சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!
-
கட்டடமாக மாற்றிய நம்பிக்கை : பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ - இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர் !
-
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல : சென்னையில் மினி மின்சார AC பேருந்துகள்!