India
குஜராத் கலவரம் : பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குஜராத் அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10–க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ. 5 லட்சத்தை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். அவரது குழந்தையை அடித்துக்கொன்றிருக்கிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு இரண்டு வாரத்துக்குள் குஜராத் அரசு 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அந்த பெண் விரும்பும் இடத்தில் அவருக்கு அரசு வீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!