India
குஜராத் கலவரம் : பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குஜராத் அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10–க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ. 5 லட்சத்தை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். அவரது குழந்தையை அடித்துக்கொன்றிருக்கிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு இரண்டு வாரத்துக்குள் குஜராத் அரசு 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அந்த பெண் விரும்பும் இடத்தில் அவருக்கு அரசு வீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!