India
ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி கைது
தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது (JeM) அமைப்பு தீவிரவாதியை ஸ்ரீநகரில் சிறப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியை சேர்ந்தவன் பையஸ் அகமது லோன்.
2000 ஆம் ஆண்டு மெளலானா மசூத் அசார் இக்குழுவைத் தொடங்கினான். இவன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தலின்போது விடுவிக்கப்பட்டவன். விடுதலைக்குப் பின் ஹர்கத்-உல்-முஜாகிதீன் போராளிக் குழுவிலிருந்து விலகி, இக்குழுவை ஆரம்பித்தான். ஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் இவனது ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தில் இணைந்தனர்.
2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்போராளிக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழு தனது பெயரை குத்தாம் உல்-இஸ்லாம் (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அமைப்பு இது.
இந்நிலையில் தற்போது தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது (JeM) அமைப்பு தீவிரவாதியை ஸ்ரீநகரில் சிறப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியை சேர்ந்தவன் பையஸ் அகமது லோன்.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த இவனது தலைக்கு 2 லட்சம் பரிசுதொகை அறிவித்து, கடந்த 2014ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் தேடி வந்தது.இந்நிலையில் ஸ்ரீநகரில் தலைமறைவாக இருந்த அவனை, டெல்லி தனிப்படை பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!