DMK Government
“தி.மு.க. கூட்டணியே மிகப்பெரிய வெற்றி பெறும்; மே 2ல் நாங்கள் சொன்னது தெரிய வரும்” - ப.சிதம்பரம் பேட்டி!
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., நேற்று காலை, தமது வாக்கினை, அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டனூரில் - சிட்டாள் ஆச்சி நினைவு உயர் நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்!" என உறுதிபடக் குறிப்பிட்டார்.
ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“நான் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்பதிலே எந்த விதமான அய்யமும் இல்லை.
அந்த வழியிலே காரைக்குடி தொகுதி மிகப்பெரிய வெற்றியை எங்களுக்குத் தரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம், வேகம் எல்லாம் நன்றாகவே புரிகிறது.
ஆக, அந்த ஆர்வமும், வேகமும், தேவையும் இந்தத் தேர்தலிலே பிரதிபலித்து, மே மாதம் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, நாங்கள் சொன்னது உண்மை, நாங்கள் சொன்னது மெய்ப்பிக்கப்படும் என்பதை நான் அழுத்தமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.”
இவ்வாறு கூறியுள்ளார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!