DMK Government
“தி.மு.க. கூட்டணியே மிகப்பெரிய வெற்றி பெறும்; மே 2ல் நாங்கள் சொன்னது தெரிய வரும்” - ப.சிதம்பரம் பேட்டி!
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., நேற்று காலை, தமது வாக்கினை, அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டனூரில் - சிட்டாள் ஆச்சி நினைவு உயர் நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்!" என உறுதிபடக் குறிப்பிட்டார்.
ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“நான் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்பதிலே எந்த விதமான அய்யமும் இல்லை.
அந்த வழியிலே காரைக்குடி தொகுதி மிகப்பெரிய வெற்றியை எங்களுக்குத் தரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம், வேகம் எல்லாம் நன்றாகவே புரிகிறது.
ஆக, அந்த ஆர்வமும், வேகமும், தேவையும் இந்தத் தேர்தலிலே பிரதிபலித்து, மே மாதம் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, நாங்கள் சொன்னது உண்மை, நாங்கள் சொன்னது மெய்ப்பிக்கப்படும் என்பதை நான் அழுத்தமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.”
இவ்வாறு கூறியுள்ளார்.
Also Read
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!