DMK Government
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவு.. நாளை பரிசீலனை.. கரூரில் போட்டியிட 70 பேர் மனு தாக்கல்!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் முடிவடைந்தது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கியது. இதுவரை தமிழகம் முழுக்க 4ஆயிரத்து 549 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 70 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேட்டூர் மற்றும் காங்கேயத்தில் 45 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக விளவங்கோடு தொகுதியில் 6 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். அதில் தகுதியான வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 22ஆம் தேதி. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதையடுத்து, ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Also Read
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
-
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!