Election 2024
”நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது” : ராகுல் காந்தி
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று உத்தர பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கிடையில் நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக பா.ஜ.கவை தோற்கடிக்க மக்கள் எழுந்து நின்று இருக்கிறார்கள் என்பதை முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் தெளிவாக்கிவிட்டது.
வெறுப்பு அரசியலை கண்டு சலிப்புற்ற இந்த நாடு இப்போது தனது சொந்த பிரச்சனைக்காக வாக்களிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடனில் இருந்து விடுதலை, உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக வாக்களிக்கிறார்கள்.
இந்தியாவுடன் இணைந்து மக்கள் இந்த தேர்தலில் போராடுகிறார்கள். நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது" என தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு கட்ட தேர்தல்களே உள்ளன. ஜூன் 4 ஆம் தேதி 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழனா மோடி அரசு? பாஜகவின் பொய்களும், அதன் உண்மை விளக்கமும் - முழு விவரம்!
-
சென்னையில் 700 அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மாளிகை, அச்சகம் ஆகியவை திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“உங்கள் கனவு நிறைவேறிவிட்டது! இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற புறப்படுங்கள்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மருத்துவப் படிப்பில் Sports Quota... MBBS, BDS இட ஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அனுமதி.. - விவரம் உள்ளே!