DMK
விழுப்புரம் மாவட்டத்தில் மக்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின்! (Album)
விழுப்புரம் தொகுதி-சிந்தாமணியில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன் அவர்களின் வீட்டிற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் (ம) -விக்கிரவாண்டி தொகுதி - முண்டியம்பாக்கத்தில் கரும்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ஊரடங்கில் மக்கள் அவதியுற்ற போது கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்திய அடிமைகள்,தேர்தல் நேரத்தில் உதவுவது போல நடிக்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இருளர்கள்-நரிக்குறவர்கள் திருநங்கைகள்-வர்த்தகர்கள் என பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்களை சந்தித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க தலைமையிலான அரசு அமைந்ததும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்களுடன் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின், வெற்றியைக் குறுக்கு வழியில் அடையத்துடிக்கும் அடிமைகளை வீழ்த்த, களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழுப்புரம் (ம) மாவட்டம் - விக்கிரவாண்டியின் முன்னாள் நகர கழகச் செயலாளர் அர.ராமசாமி அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் (ம) - விக்கிரவாண்டியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், கொரோனா போன்ற பேரிடர்களை கூட கொள்ளையடிக்கவும் - ஊழல் செய்யவும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளும் அடிமைகளை ஒழிப்போம் என்றார்.
Also Read
-
தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !
-
இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் நிர்வாகி கைது !
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!