DMK
“ஹிட்லர் செய்ததுபோல, நம்மையும் வதைமுகாமில் அடைப்பார்கள்” - எச்சரிக்கும் துரைமுருகன்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது. இன்று சட்டப்பேரவையில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், “என்.பி.ஆர் படிவத்தில் அப்பா, அம்மா, பாட்டி பெயர் கேட்கப்படுகிறது. அப்படி தெரியவில்லை என்றால் என்ன பண்டிகை கொண்டாடினீர்கள் என கேட்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால் ரம்ஜான், பக்ரீத் என்றால் விடமாட்டார்கள்.
அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேரை ஹிட்லர் போல அகதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்படி நம்மையும் கொண்டு போய் நாளை அங்கு அடைத்து விடுவார்கள். அன்றைக்கு நீங்கள் இருப்பீர்கள். அவர்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த குடும்பத்தினருக்கே இந்த சட்டத்தினால் பிரச்சனை ஏற்படும்போது, சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்பதுதான் கேள்வி.
அதுமட்டுமின்றி, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று தெரியாமல் அந்த சமுதாய மக்கள் உயிரை கையில் பிடித்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் வாக்கு வங்கிக்காக சிலர் தூண்டுதலின் பேரில் போராடுகிறார்கள் என அமைச்சர் தெரிவிப்பது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!