DMK
"நியாயம் வேண்டும்” - கோவில்பட்டி யூனியன் சேர்மன் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து கனிமொழி எம்.பி தர்ணா!
முறைகேடு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 335 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பல இடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி தி.மு.க எம்.பி கனிமொழி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தி.மு.கவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 9 உறுப்பினர்கள் உள்ள அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி முறைகேடாக அறிவித்தார்.
மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் 10 பேர் தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க எப்படி வெற்றி பெற முடியும் என தி.மு.க-வினர் கேள்வி எழுப்பினர்.
இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, சரிவர விளக்கமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்கள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கனிமொழி எம்.பி தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலை மீண்டும் நியாயமாக நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவில்பட்டி ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலில் முறைகேடாக அ.தி.மு.க வென்றதாக அறிவிவிக்கப்பட்டிருப்பதாக கூறிய கனிமொழி எம்.பி., இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்தார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!