DMK
"நியாயம் வேண்டும்” - கோவில்பட்டி யூனியன் சேர்மன் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து கனிமொழி எம்.பி தர்ணா!
முறைகேடு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 335 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பல இடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி தி.மு.க எம்.பி கனிமொழி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தி.மு.கவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 9 உறுப்பினர்கள் உள்ள அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி முறைகேடாக அறிவித்தார்.
மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் 10 பேர் தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க எப்படி வெற்றி பெற முடியும் என தி.மு.க-வினர் கேள்வி எழுப்பினர்.
இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, சரிவர விளக்கமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்கள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கனிமொழி எம்.பி தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலை மீண்டும் நியாயமாக நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவில்பட்டி ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலில் முறைகேடாக அ.தி.மு.க வென்றதாக அறிவிவிக்கப்பட்டிருப்பதாக கூறிய கனிமொழி எம்.பி., இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்தார்.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!