DMK
வேலூர் தேர்தல் வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்தது - கதிர் ஆனந்த் எம்.பி
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை வேலூரில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தொடங்கி நடைபெற்றது.
இதில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கதிர் ஆனந்த், அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை விட, 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழையும், தேர்தல் அதிகாரியிடம் இருந்து கதிர் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.
வேலூர் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், தான் பெற்ற வெற்றி முழுக்க முழுக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிப்பதாகவும் பேசியுள்ளார்.
இது தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் பெற்ற வெற்றியின் மூலம் மக்களவையில் தி.மு.க.,வின் பலம் 24 ஆக உயர்ந்துள்ளது.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!